மருத்துவரின் அலட்சியம்.,, பரிதாபமாக உயிரை விட்ட 17 வயது சிறுமி..,,துடிக்கும் பெற்றோர்கள்!!

0
மருத்துவரின் அலட்சியம்.,, பரிதாபமாக உயிரை விட்ட 17 வயது சிறுமி..,,துடிக்கும் பெற்றோர்கள்!!
மருத்துவரின் அலட்சியம்.,, பரிதாபமாக உயிரை விட்ட 17 வயது சிறுமி..,,துடிக்கும் பெற்றோர்கள்!!

சென்னை பிரபல மருத்துவமனையில் மருத்துவரின் கவனக்குறைவால் 17 வயது சிறுமி பரிதாபமாக இறந்துள்ளார்.

17 வயது சிறுமி இறப்பு:

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த நந்தினி என்பவர் கடந்த வியாழக்கிழமை கடும் வயிற்று வலி காரணமாக, சென்னை கலெக்டர் ஆபீஸ் பின்புறம் உள்ள நேஷனல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அந்த சிறுமிக்கு வயது 17 ஆகும். இதையடுத்து மருத்துவர்கள் அவரை சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு அல்சர் பாதிப்பு உள்ளதாக பெற்றோர்களிடம் கூறிய நிலையில், நந்தினி தொடர் சிகிச்சையில் இருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து நந்தினியை நாளை (2.11.22) வீட்டுக்கு அழைத்து செல்லலாம் அவர் நலமாக உள்ளார் என்று மருத்துவமனை சார்பாக நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், நேற்று என் மகள் நன்றாக தானே இருந்தாள், எப்படி இது நடந்தது என தொடர் கேள்விகளை மருத்துவர்களிடம் கேட்டனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் குழந்தைகளுக்காக “விதை” திட்டம்.,, தொடங்கி வைத்தார் முதல்வர்!!

இதையடுத்து சிறுமிக்கு நேற்று இரவு ஊசி ஒன்றை மருத்துவர்கள் செலுத்தியுள்ளனர். அந்த ஊசியில் தான் பிரச்சனை இருக்கிறது, மருத்துவரின் கவனக்குறைவால் தான் எங்கள் மகள் இறந்து விட்டால் என சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை முன் கதறி அழுகின்றனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனை முன் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், நந்தினியின் இறப்பிற்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here