கோலிவுட் திரையில் நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் ஜொலித்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் கதை கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த ”ஆய்வுக்கூடம்” என்ற படத்தில் கதையை காப்பி அடிக்கும் வகையில் இருப்பதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 14 தேதி திரைக்கு வர இருந்த பணத்திற்கு தற்காலிகமாக தடை விதித்திருந்தார். இதைதொடர்ந்து ஆண்டனி சார்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தொடுக்கப்பட்டது. அதாவது இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதால் தான் மிகுந்த மனவேதனைக்கு, நஷ்டத்துக்கு உள்ளாவதாக குறிப்பிட்டிருந்தார்.