தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டதாக சென்னை வானிலை மையம் முன்னதாக அறிவித்திருந்தது. எனவே அடுத்த வரும் மாதங்கள் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்க போகிறது என்பதால் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள எல்லாம் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மாநகராட்சி சார்பில் “குழுவுடன் களத்தில் இறங்கு” என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வார்டுக்கும் 10 பணியாளர்கள் செயல்படுவார்கள். மேலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அவசர கால பணிகளுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.