தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் பின் வேளாண் பட்ஜெட் தாக்கல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என மேயர் பிரியா சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
தமிழக பள்ளி மாணவர்களே.., இனி இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!
இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பள்ளி கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு, புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இன்று நடைபெறும் பட்ஜெட்டை தொடர்ந்து நாளை இதற்கான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.