தமிழக சட்டசபையில் நேற்று முன் தினம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை தொடர்ந்து இன்று சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தான் பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.
அதன்படி இனி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு வண்ண அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், இரண்டு செட் சீருடைகள் வழங்கப்படும். இது தவிர மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ரூபாய் 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.