புதுடெல்லியில் நடைபெற்ற ளோபல் மிஸ்டர் மற்றும் மிஸ் இந்தியா ஆசியா போட்டியில் மிஸ் இந்தியாவாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தேர்வாகி உள்ளார்.
இந்த போட்டி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இருந்து சென்னையை சேர்ந்த மாணவி பாஷினி பாத்திமா (19 வயது) உட்பட 3 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாடலிங் துறையை சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நீச்சல், நடனம், திறனறிவு, உடல் தகுதி, யோகா என 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதி சுற்றில் தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் பாஷினி பாத்திமா 2020-ம் வருடத்திற்கான `குளோபல் மிஸ் இந்தியா ஆசியா அழகி பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றி குறித்து கூறிய அவர், இந்தத் துறையின் மீது உள்ள தவறான எண்ணத்தினால் மாடலிங் போட்டிகளில் பங்கேற்க தமிழகப் பெண்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த எண்ணம் மாற வேண்டும். தமிழக பெண்கள் அதிக அளவில் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் என் ஆசை’ என்று தெரிவித்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |