தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பால் உற்பத்தி தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், நுகர்வோர்களுக்கான பால் விநியோகம் தாமதமாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பால் விநியோகம் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையில் பல இடங்களிலும் ஆவின் பால் விநியோகம் தாமதமாகும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி அயனாவரம், பெரம்பூர், அண்ணா நகர், கொரட்டூர், மயிலாப்பூர், வில்லிவாக்கம், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு பகுதிகளில், ஒரு சில மணி நேரம் பால் விநியோகம் தாமதமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சீரான பால் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
திருமணமான புது தம்பதிகளா நீங்க.., அப்போ உங்களுக்கு தான் இந்த நியூஸ்.., மிஸ் பண்ணிடாதீங்க!!!