தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில பகுதிகளிலும், பிரசித்தி பெற்ற கோவில்களில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோயிலில், தேர் திருவிழா நடைபெற்றது. 150 அடி உயரம் கொண்ட இந்த தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது தேர் சாய்வதை பார்த்து சுதாரித்துக் கொண்ட பக்தர்கள், அந்த இடத்தை விட்டு உடனடியாக ஓட்டம் பிடித்தனர். இதன் காரணமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
வெளியான இந்தியன் 2 படத்தின் அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!