நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை வந்ததிலிருந்து பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு எளிதாக சென்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் கொண்டு வந்த மெட்ரோ திட்டம் மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக தான் உள்ளது. இந்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களின் வசதிக்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை மக்கள் பார்க்கும் வகையில் அன்று ஒருநாள் மட்டும் அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் 4:00 மணியில் இருந்து 30 மணி நேர இடைவெளியில் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.