இந்தியாவில் பெண்கள், முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தொலைதூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புகின்றனர். அதற்கேற்றாற்போல் பல்வேறு வசதிகளையும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பண்டிகை, வார விடுமுறை உள்ளிட்ட நாட்களில், பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே தீர்ந்து விடுகிறது. நூற்றுக்கணக்கானோர் வெயிட்டிங் லிஸ்டில் சென்று விடுகின்றனர்.
இதனால் பலரும் கவலை தெரிவித்து வரும் நிலையில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியில் புதிய ரயில்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அப்படி புதிய ரயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் வெயிட்டிங் லிஸ்ட் பிரச்சனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 மீம்ஸ்.., மக்கள் மனதை வென்றது என்ன தெரியுமா??