ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு ஊதியம் – உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு..!

0
Salary
Salary

ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு எவ்வித பிடித்தமும் செய்யாமல் முழு ஊதியமும் தர வேண்டும் என பிறப்பிக்கப்பட்டு இருந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

முழு ஊதியம்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தற்போது மெது மெதுவாக செயல்படத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக தொழில் நஷ்டத்தை காட்டி பல நிறுவனங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்தன.

இதனால் பொதுமுடக்கம் காலத்திலும் ஊழியர்களுக்கு முழு அளவு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதாவது மார்ச் 25 முதல் மே 14ம் தேதி வரை ஊழியர்கள் பணி செய்யாவிட்டாலும் ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நிறுவனங்களுக்கு பெரிய நஷ்டம் மற்றும் பொருளாதார சுமை ஏற்படும் எனவே இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இன்று விசாரணைக்கு வந்த பொழுது பொதுமுடக்கம் காலத்தில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் முழு சம்பளமும் வழங்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்று உள்ளதாக மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஆனால் மார்ச் 25 முதல் மே 14 வரை 54 நாட்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட முடியாது என மத்திய அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here