நாடு முழுவதும் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் முடிவடைந்து புதிய அரசு, ஆட்சி அமைத்தவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு இல்லாமல் இருக்கலாம் என ஒரு சாரார் பேசி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இருந்தாலும் அதிகமான வருமான வரி, ஜிஎஸ்டி காரணமாக மத்திய அரசுக்கு அதிக அளவில் வருவாய் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த பட்ஜெட்டில் பெண்கள், விவசாயிகள் மற்றும் சமூக திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக பி.எம். கிசான் திட்ட விவசாயிகளுக்கான உதவித்தொகையை இரட்டிப்பாக்கலாம் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்…, உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி…, உடனே முந்துங்கள்!!