அரசாங்க துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த கோரி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை 34% லிருந்து 38%மாக உயர்த்தியதாக அறிவித்து இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைத்தொடர்ந்து மீண்டும் அகவிலைப்படியை மார்ச் மாத இறுதிக்குள் உயர்த்த உள்ளதாக அண்மை காலமாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்த தகவலுக்கு உயிரூட்டும் விதமாக நேற்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 38% சதவீதத்திலுருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
LPG சிலிண்டருக்கு ரூ.200 மானியத் தொகை.., மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு.., மத்திய அரசு அறிவிப்பு!!
உயர்ந்து வரும் விலைவாசியை சமாளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.