மத்திய அரசின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ், மாதம் தோறும் ரூ.18, 5000 லிருந்து ரூ. 9250 வரை ஓய்வூதியம் கிடைக்கும், சூப்பர் திட்டம் குறித்த முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சூப்பர் திட்டம்:
மக்கள் பெரும்பாலும், முதலீடு செய்வதற்கு தனியார் நிதி நிறுவனங்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் இதில் ஏமாற்றம், மோசடி போன்றவை அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக, மத்திய அரசின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்ற சேமிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் அதிகபட்சம் ரூ. 15 லட்சம் என்ற கணக்கில் இருவருக்கும் சேர்த்து ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இவர்களுக்கான வருடாந்திர வட்டி 7.40% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து கணக்கிடும் போது ஆண்டு வட்டி ரூ. 2, 22, 000 வரையிலும், மாதம் தோறும் ரூ. 18500 வரை உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது.
தம்பதியில் யாரேனும் ஒருவருக்கு மட்டும் முதலீடு செய்து கொள்ள, ரூ. 15 லட்சம் மட்டும் செலுத்தி மாதந்தோறும் ரூ. 9,250 ஓய்வூதியமாக பெறலாம். இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் மொத்தம் 10 ஆண்டுகள். மூத்த குடிமக்கள் அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட பலரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் ஓய்வு காலத்தில், உங்களுக்கான தொகை கைமேல் பலனாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.