பிரபல நடிகையான சமந்தாவிற்கு இரண்டு படங்கள் வெளியிட்டிருக்காக காத்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எல்லா நடிகைகளுக்கும் வயது ஏற ஏற வாய்ப்புகள் குறைந்து கொண்டே தான் செல்லும்.
ஆனால் சமந்தாவிற்கு வாய்ப்புகள் எகிறிக்கொண்டே தான் செல்கிறது. விவாகரத்திற்கு பிறகு சுதந்திரமாக இருக்கும் சமந்தா எந்த கதாபாத்திரம் என்றாலும் ஏற்று நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்படி இருக்க இப்பொழுது சமந்தா பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சமந்தா நாகசைதன்யாவை திருமணம் செய்தபின் குடும்பத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் சமந்தாவும் தொடர்ந்து நடிக்க ஆரம்பிக்க நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனாலும் சமந்தா தனது கெரியரின் மீது இருந்த காதலால் அதனை கேட்க மறுத்துள்ளார். அதன் பிறகு தான் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் அதிகம் ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.