இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு இடையில் நடைபெறும் போட்டிக்கான வானிலை மற்றும் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
IND VS SA ODI 1st Match
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை லக்னோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. மறுபுறம் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா களமிறங்குகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே டி20 தொடரில் இந்திய அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் இந்த ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் நாளை மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என வீரர்கள் அச்சத்தில் உள்ளனர். மறுபுறம் இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுக்கும் வகையில் உள்ளது.
இதனால் இங்கு வீரர்கள் அதிக ரன் குவிக்க வாய்ப்புள்ளது. மேலும் பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் தங்களது கைவரிசையை காட்ட சாதகமான சூழல் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் எந்த அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெறப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.