நாட்டில் தற்போது மிக பெரிய அளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இதனை குறைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆக்சிஜன்:
இந்தியாவில் கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையை விட தற்போது வீசும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் மக்கள் அனைவரும் வேதனை அடைந்து வருகின்றனர். மக்கள் அனைவரையும் மேலும் வேதனை அடைய செய்யும் வகையில் மேலும் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதாவது நாட்டில் கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஆகிசிஜன் இன்றி பலர் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கும் வகையில் மத்திய அரசு அனைத்து தரப்பு நடவடிக்கைகளையும் மிக தீவிரமாக செய்து வருகிறது.
தமிழகத்தில் ஆச்சிஜன் பற்றாக்குறை?? ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!!
இந்நிலையில் மத்திய உள்துறை இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்த கூடாது. மேலும் அந்த வாகனங்கள் விரைந்து செல்கிறதா?? என்பதனையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.