கொரோனா நோய்த்தொற்று எதிரொலி – மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!!

0

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஆலோசனை கூட்டம்:

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொது இடங்களில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை கடைபிடிக்க தவறுபவர்களிடம் தக்க அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

இந்நிலையில் இதன் காரணமாக தற்போது தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மதியம் 3.30 மணி அளவில் தனது ஆலோசனையை தொடங்கவுள்ளார். இந்த ஆலோசனையை காணொளி மூலம் நடத்துகின்றனர். மாவட்டங்களில் ஏற்படும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here