நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தான் மார்க் ஆன்டனி. இப்படம் பொருளாதார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான நிலையில் தற்போது ஹிந்தி மொழியில் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்சார் போர்டு லஞ்சம் கேட்பதாக விஷால் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை நடத்தியதில் சென்சார் போர்டு லஞ்ச பணம் வாங்கியது நிரூபிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ஜுஜு ராமதாஸ் மேனகா மற்றும் ராஜன் உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது, அதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் கிடைக்கப் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக லஞ்சம் பெற்ற சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.