பாலிவுட்டில் பிரபல ஹீரோயினாக இருந்து வரும் ஷில்பா ஷெட்டி கடந்த 2009ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார். இந்நிலையில் ராஜ் குந்த்ரா தனது X பக்கத்தில், நாங்கள் பிரிந்துவிட்டோம், இந்த கடினமான சூழலை கடக்க, எங்களுக்கு நேரம் கொடுங்கள் என பதிவிட்டிருந்தார்.இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அப்போ அவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கமும் ஷில்பா ஷெட்டி விதம்விதமாக போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் ராஜ் குந்த்ரா தற்போது UT 69 படத்தின் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்திற்காக 2 ஆண்டுகளாக மாஸ்க் அணிந்து இருந்தாராம். அந்த மாஸ்க் இனி வேண்டாம், என்னும் விஷயத்தை கூறுவதற்காகத்தான் அந்த பதிவு என அவர் பகிர்ந்த அடுத்த பதிவில் தெரிந்துவிட்டது. இவரின் அடுத்த பதிவால் ரசிகர்கள் தற்போது சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.