பிரதமர் மனைவியை தாக்கிய கொரோனா – தொடர்ந்து அதிகரிக்கும் உயிர்பலி..!

0

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டி படைத்தது வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தற்போது கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

14 நாட்களுக்கு தனிமை..!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பிரிட்டனில் இருந்து திரும்பிய சோபி கிரிகோயருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டினுக்கு கொரோனா இல்லை எனவும் இருப்பினும் 14 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here