அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஏழை எளிய மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் உப்புமா வெரைட்டி, கிச்சடி வெரைட்டி, வெண் பொங்கல் போன்றவை வழங்கப்படுவதால் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகமாகி வருவதாகவும், கல்வி இடைநிற்றல் நீங்குவதாகவும் தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இத்திட்டம் சென்னை, மதுரையில் முதற்கட்டமாக தொடங்கிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் (மார்ச் 1) முதல் பல்வேறு மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாநகராட்சியில் 64 பள்ளிகளில் செயல்பட்டு வந்த நிலையில் இன்று (மார்ச் 28) முதல் கூடுதலாக 32 பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 96 பள்ளிகளில் 9,180 மாணவ மாணவியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யை சங்கீதா ரொம்ப புரிஞ்சிக்கிட்டவங்க.., இந்த ஒரு விஷயத்துலையே தெரியுது.., வெளிவந்த உண்மை!!
இத்திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்புகளையும் முதல்வருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.