நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் தமிழை விட தெலுங்கில் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அவருடன் இணைந்து மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அண்மையில் வெளியான படத்தின் டிரைலர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டியது. மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சமந்தா சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இந்த நோய் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., விரிவுபடுத்தப்பட்ட முக்கிய திட்டம்!!
அதாவது அவர் பேசியதாவது, எனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோய் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. நான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இருப்பினும் முன்பு இருந்த பாதிப்பை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கொஞ்சம் தேறி இருக்கிறேன். இந்த நோய் பாதிப்பில் இருந்து கூடிய விரைவில் முழுமையாக மீண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.