ஆஸ்திரேலியாவில் நடக்கும் மகளிருக்கான ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில் ஒசாகா மற்றும் பிராடி பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
டென்னிஸ்:
தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து வருவதால் அனைத்து தரப்பு போட்டிகளும் நடந்து வருகிறது. மேலும் தற்போது மைதானத்திற்கு விதிமுறைக்கு உட்பட்டு ரசிகர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலியாவில் கிராண்ட்ஸ்லாம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் அரை இறுதி போட்டி நேற்று நடந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதில் நேற்றைய அரை இறுதி போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஒசாகா முன்னேறி அசத்தினார். மற்றொரு அரை இறுதி போட்டியில் அமெரிக்காவின் பிராடி மற்றும் செக்குடியரசின் கரோலினா பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராடி 6-4, 3-6 மற்றும் 6-4 என்ற கணக்கில் வென்று அசத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸ் விருப்பமனு விநியோகம்!!
இந்த வெற்றியின் மூலம் தற்போது பிராடி இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மகளிருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் ஒசாகா மற்றும் பிராடி பல பரீட்சை நடத்துகின்றனர். இந்த இறுதி போட்டி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.