பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்த யாஷிகா ஆனந்த் தனது காதல் பிரேக் அப் ஆனதற்கான காரணத்தை தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
யாஷிகா வெளிப்படை:
பிக் பாஸ் நிகழ்ச்சியில், தனது நெருங்கிய நண்பருடன் கலந்து கொண்டவர் யாஷிகா. இந்த நிகழ்ச்சிக்கு நிரூப் வந்த பிறகு தான் இவர்கள் இருவரும், நெருங்கி பழகிய நண்பர்கள் என்ற விவரம் ரசிகர்களுக்கு தெரிய வந்தது. இந்த நிகழ்ச்சியில், யாஷிகாவிற்காகவாவது டைட்டில் அடிக்க வேண்டும் என வெறி கொண்டு விளையாடினார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் இவர் ஆசை வரும் கனவாக மட்டுமே முடிந்தது. இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில், லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த நிரூப்- யாஷிகா இருவரும், தற்போது பிரிந்து இருப்பதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து அண்மையில் பேசிய யாஷிகா, பிரண்டாக இருப்பதெல்லாம் லவ் கிடையாது. மேலும், முதுகில் குத்தியவனை காதலனாக ஏற்றுக் கொள்ள முடியாது. பிரேக்கப்பாக நிறைய காரணம் இருக்கிறது. ஆனால், அதில் முக்கியமானது என் மனது காயப்பட்டது தான் என குறிப்பிட்டுள்ளார். நடிகை யாஷிகாவின் திடீர் பதிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.