‘நான் என் கருத்தை சொல்லி தான் தீருவேன்’ – பாலாவை வம்புக்கு இழுக்கும் அனிதா!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 75 நாளைக்கு பிறகு இப்பொழுது தான் போட்டியாளர்கள் தனித்து விளையாட ஆரம்பித்துள்ளனர். ரியோ, சோம் வேற லெவெலில் விளையாடிக்கொண்டுள்ளனர். இன்றைய எபிசோடுகள் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து 2 நாட்களாக பால் கேட்ச் போட்டி நடைபெற்றுக்கொண்டுள்ளது. அர்ச்சனா இல்லாததால் சோம், ஆரி மற்றும் கேபி போன்றோர் ஆட்டத்தில் கவனம் செலுத்து வருகின்றனர். பாலாவிற்கே கடும் போட்டி கொடுத்து வருகின்றனர் அன்பு டீம். நேற்று கூட அனைவரையும் விட ரியோவின் மதிப்பெண்களே அதிகமாக இருந்தது.

இதனை நாட்கள் ரியோ ரசிகர்கள் விரும்பியதே அதைத்தானே. ஆனால் அர்ச்சனாவின் கட்டப்பட்டிலேயே தனது கேமை விளையாடாமல் விட்டு விட்டனர். அதன் பிறகு எப்பொழுதுமே கத்திக்கொண்டு இருக்கும் அனிதா 1 நாள் தான் அமைதியாக இருந்தார். நேற்று மறுபடியும் ஆரம்பித்து விட்டார். ஒரு கடலை பருப்பை யார் கொட்டியது என்ற கேள்விக்கு அத்தனை ஆர்ப்பாட்டம் செய்தார்.

இதனால் சண்டைகளும் ஏற்பட்டது. ஆனால் கடைசி வரை மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உறுதியாக நின்றார். ஆரம்பத்திலேயே சோம் அனிதாவிடம் ஒரு நல்ல நட்பாக தான் பழகிவந்தார். ஆனால் அனிதாவே அதனை கெடுத்துக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது ஒன்று என்றால் 10 நிமிடம் தொடர்ந்து பேசுகிறார். இதுவே மக்களுக்கு கடுப்பாகிறது. இன்றைய ப்ரோமோவிலும் அவர் தான் சண்டையை மறுபடியும் ஆரம்பிக்கிறார். முதல் ப்ரோமோவில் 4 வது சுற்றாக பச்சை நிற பாலை யார் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு அட்வான்டேஜாக சலுகைகள் வழங்கப்படும்.

அதாவது சில கார்டுகள் ஒரு போர்டில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாம். முதலில் ரம்யா பாண்டியன் ஒரு கார்டை எடுக்க அதில் போட்டியாளர்களின் யாரேனும் ஒரு நபருக்கு மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்கலாம் என்று இருந்தது. ரம்யா சற்றும் யோசிக்காமல் ரியோவின் பெயரை சொல்லுகிறார்.

அடுத்ததாக பாலா கார்டை எடுக்க அதில் 100 மதிப்பெண் அதிகரித்துக்கொள்ளலாம் என இருந்தது. அடுத்து கேபி எடுக்கிறார். அதில் யாராவது ஒருவரின் மதிப்பெண்ணை இனொருவருக்கு மாற்றலாம் என இருந்தது. அதில் பாலாவின் மதிப்பெண்ணை ரியோவிற்கு மாற்றுகிறார்.

இதனால் கடுப்பாகும் பாலா கோவமாகி செல்கிறார். அடுத்த ப்ரோமோவில் சுவாரசியம் கம்மியாக இருந்தவர்களை நாமினேட் செய்கின்றனர். அதில் அனிதா பாலாவை இழுக்க நேற்று நடந்த விஷயத்தை சொல்கிறார். இதனால் பாலாவிற்கு கோவம் வந்து இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்கிறார். மறுபடியும் அனிதா பேச ஆரம்பிக்க சண்டையில் முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here