டிச.31 முதல் முழு ஊரடங்கு உத்தரவு – புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க தீவிர நடவடிக்கை!!

0
ஸ்டெல்த் ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி - நாடு முழுவதும் மார்ச் 23 முதல் பொது முடக்கம் அமல்??
ஸ்டெல்த் ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி - நாடு முழுவதும் மார்ச் 23 முதல் பொது முடக்கம் அமல்??

டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணி முதல் மறுநாள் (ஜனவரி 1) காலை 6.00 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு உத்தரவு:

தற்போது கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மாநில அரசுகளை மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தூண்டியுள்ளது. எனவே 2021 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ராஜஸ்தான் அரசும் புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது பற்றி வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ராஜஸ்தானில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. அதன்பொருட்டு டிசம்பர் 31ம் தேதி மாலை 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அனைத்து சந்தைகளும், கடைகளும் மூடப்படும்.

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி திருவிழா கொண்டாட்டம் – நீதிமன்றம் அனுமதி!!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும், பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி உபயோகம் ஆகியவை முறையாக கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் 937 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது தொற்று பரவலை தவிர்க்கும் பொருட்டு மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here