சதியால் பாதியில் நிறுத்தப்பட்டதா பிக்பாஸ் நிகழ்ச்சி.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சதியால் பாதியில் நிறுத்தப்பட்டதா பிக்பாஸ் நிகழ்ச்சி.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
சதியால் பாதியில் நிறுத்தப்பட்டதா பிக்பாஸ் நிகழ்ச்சி.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

உலகநாயகன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து 6வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் இதுவரை எந்த சீசனிலும் நடக்காத ஒன்று இந்த சீசனில் நடந்துள்ளது. அதாவது மக்களும் இந்த சோவில் போட்டியாளராக கலந்து கொண்டனர். 24 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில் தற்போது 14 போட்டியாளர்களே மிச்சம் இருக்கின்றனர். இந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா எலிமினேட் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது கமல்ஹாசன் தொகுத்து வரும் இந்த நிகழ்ச்சி பாதியில் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் வெளியாகும் ப்ரோமோ வீடியோவும் வெளியாகவில்லை. அந்த காரணத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி விட்டார்கள் போல என்று ரசிகர்கள் பரவலாக பேசி வருகின்றனர்.

கல்யாணம் முடுச்ச கையோட ஹன்சிகா பண்ண வேலைய பாத்திங்களா!

அதற்கு காரணம் இந்த மாண்டஸ் புயலாக இருக்கலாம் என்று ஒரு பக்கம் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வாரம் ஆயிஷா வெளியே போக வேண்டும் என்று பிக்பாஸ் குழுவினர்கள் சதி செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் ஆயிஷா டாஸ்கில் நன்றாக விளையாடி வந்ததை பிக்பாஸ் நிகழ்ச்சி மறைத்து விட்டார்கள் என்று ஆயிஷா ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here