பிக் பாஸ் நிகாழ்ச்சியில் தற்போது யாரும் எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். யார் யார்?? எப்படி?? என்பதை கணிக்க முடியாத அளவிற்கு போயிக்கொண்டுள்ளது. நேற்றைய எபிசோடில் ஆரி இதுவரையிலும் வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறி அனைவரின் முகத்திரையை கிழித்தார். முக்கியமாக அர்ச்சனா இதுநாள் வரை செய்து வரும் காரியங்களை பற்றி புட்டு புட்டு வைத்தார் ஆரி.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 4 தற்போது வெற்றிகரமாக 3 வாரத்தை கடந்துள்ளது. ஏற்கனவே முதல் வாரத்தில் ரேகா வெளியேறினார். அதன் பிறகு அடுத்த வாரம் ஆஜித் வெளியேறுவதாக இருந்தது ஆனால் அவரிடம் எவிக்ஷன் பாஸ் இருந்ததால் நோ எலிமினேஷன் என அறிவிக்கப்பட்டது.
இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் வேல்முருகன் வெளியேற அதிகவாய்ப்புள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று கமல் பங்கு பெரும் நிகழ்ச்சி என்பதால் அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
எடுத்த ஆரம்பத்திலேயே ஆயுத பூஜை நிகழ்ச்சியில் நடந்த சுமங்கலி பிரச்சனையை தான் பேசுகிறார். இதனை பற்றி அர்ச்சனாவிடம் கருத்தை கேட்க வழக்கம் போல ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக ஷிவானி அனிதா பேசியது சரி தான் என்று கூறுகிறார்.
மேலும் கமல் அனிதாவின் இந்த பேச்சுக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிக்கிறார். இதனால் அர்ச்சனா மற்றும் மற்ற போட்டியாளர்களின் முகம் 7 கோணலுக்கு செல்கிறது. மேலும் அர்ச்சனாவை பலரும் வெறுத்து வருகின்றனர். அர்ச்சனா வந்த நாளில் இருந்து இதுவரை அனைவரையும் தன் கைவசம் வைத்துள்ளார்.
யாருக்கும் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கூட தருவதில்லை. இதனை நேற்றைய பகுதியில் ஆரி அனைவரிடமும் கூறி அர்ச்சனா முகத்திரையை கிழித்தார். ஆனால் யாரும் அவரின் பேச்சை கேட்டதாக இல்லை. மேலும் ஆரம்ப காலத்தில் சனமுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பலரும் இப்பொழுது ஆதரவாக பேசி வருகின்றனர். இப்பொழுது முழு சப்போர்டும் ஆரி, சனம், அனிதாவிற்கே உள்ளது.