பொதுவாக பிக் பாஸ் ஷோவில் கலந்து கொள்பவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது சினிமாவிலும் நல்ல ரீச் கிடைக்கும். அப்படி பிக் பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக பங்கேற்றவர் தான் சம்யுக்தா. இந்த ஷோவிற்கு பிறகு இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர் தனது கணவரை பிரிந்து தன்னுடைய மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் கணவரை பிரிந்து வாழ்வதற்கான காரணத்தை முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது அவருடைய கணவர் 4 வருடமாக துபாயில் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறாராம். மேலும் இவர் பல முறை அழைத்த போதும் அதற்கு பதில் கூட கொடுக்கவில்லையாம். இதனால் 4 வருடமாக விவாகரத்து கொடுக்க முடியாமல், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறாராம். இதோடு இவரது தோழி பாவனா தான் இவரை பிக் பாஸ் ஷோவிற்கு பரிந்துரைத்தாராம். இன்று இவரது வாழ்க்கை சிறப்பாக அமைந்திருப்பதற்கு பாவனா தான் காரணம் என கூறியுள்ளார்.