பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹேஸ்வரி தற்போது போட்டியாளர்களை பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மஹேஸ்வரி
சின்னத்திரை நடிகையான மஹேஸ்வரி தற்போது பிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேமஸாகி விட்டார். இப்பொழுது 36வது நாளில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் பல இன்டெர்வியூ கொடுத்து வருகிறார். மேலும் ஹவுஸ் மேட்ஸ்கள் பற்றி அனைத்து உண்மைகளை போட்டு உடைத்து உள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சில மிருகங்களின் பெயரை சொல்லி எதனுடன் ஹவுஸ்மேட்ஸ் ஒத்து போவார்கள் என்று கேட்கப்பட்டது. அதில் யானை யார் என்று கேட்டதற்கு அசிம் தான் என்று கூறியுள்ளார். யானை வந்து ரொம்ப பெரிய மிருகமா இருக்கும், ஒரு தைரியமும் கொடுக்கும் அந்த மாதிரி தான் அசிம் என்று கூறியுள்ளார்.
மேலும் பாம்பு யாரு என்று கேட்டதற்கு ரக்ஷிதாவை கூறியுள்ளார். வீட்டுலையே அவங்களோட move பாம்பு மாதிரி தான் இருக்கும். எல்லாத்தையும் மெதுவா தான் டீல் பண்ணுவாங்க. கொத்த வேண்டிய இடத்துல கொத்திடுவாங்க, ரக்ஷிதா பாம்புனா ராபர்ட் மாஸ்டர் தான் கழுகு என்றும் கூறியுள்ளார்.
யார் என்ன பண்ணுவாங்கனு நோட் பண்ணிட்டே இருப்பாரு, குறிப்பா ரக்ஷிதாவை தான் நோட் பண்ணிட்டே இருப்பாரு என்று கூறியுள்ளார் மஹேஸ்வரி. இப்படி ஓபனா எல்லாத்தையுமே சொல்லிடீங்களே என்று பலரும் ஷாக்காகியுள்ளனர்.