இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை, ஓசூரில் அமைய இருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பின், தொழில் துறையில் சொல்ல தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, மின்னணு பொருட்கள் குறித்த தயாரிப்பில் அபரிவித வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனால் தமிழகத்தில், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இந்தியாவிலேயே மிகப்பெரிய iphone தயாரிப்பு தொழிற்சாலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அமைய இருப்பதாகவும், இதனால் இன்னும் 3 மாதத்தில் 16,000 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால், தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கும் பல பட்டதாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.