பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்பொழுது கலக்கி கொண்டு வரும் ஜனனி பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜனனி
இலங்கை பெண்ணான ஜனனி இப்பொழுது பலரின் செல்லப்பிள்ளையாக மாறி விட்டார். ஆரம்பத்திலிருந்தே இவர் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. அவரது அந்த குட்டி குட்டி ரியாக்சன் பலரையும் கவர்ந்தது. மேலும் லாஸ்லியாவுக்கு ஈக்வலாக கூட வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி நல்ல பெயர் வாங்கி வந்த ஜனனியின் ஆக்டிவிட்டீஸ் கொஞ்ச நாளாகவே சரியில்லை. கோவம் வந்தால் வீட்டில் உள்ள பொருளை போட்டு உடைப்பது, தன்னை எதாவது சொன்னால் சின்னப்பிள்ளை போல கத்துவது என பல வேலைகளை செய்து வருகிறார். இது பலரையும் முகம் சுளிக்க வைக்கும் விதமாக தான் உள்ளது.
இப்படி இருக்க இப்பொழுது ஜனனியின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இதனை பார்த்த பலரும் ஜனனி வீட்டை விட்டு வெளியே வந்துட்டாங்களா?? என்று ஷாக்காகி விட்டனர். ஆனால் அது பழைய புகைப்படம். ஏற்கனவே அவர் வெளியிட்டிருந்தது இப்பொழுது ட்ரெண்டிங்காகி வருகிறது.