விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரோமோ வெளியகியுள்ளது. இதுவரையிலும் நாம் எதிர்பார்த்திருந்த பாலாவும் ஆரியும் நேரடியாக மோதிக்கொள்கின்றனர். அந்த ப்ரோமோவில் என்ன நடந்தது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன வாரம் சம்யுக்தா வெளியேறினார். இது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் அவர் செய்த செய்கைகளுக்கு தானே அவர் வினையை அனுபவித்தார். மேலும் மக்களின் விருப்பமும் அவர் வெளியேற வேண்டும் என்பது தானே. இந்நிலையில் இந்த வாரமும் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதாவது போன வாரம் கொடுத்த கால் சென்டர் டாஸ்க் தான் இந்த வாரம். கஸ்டமராக இருந்தவர்கள் இப்பொழுது கால் சென்டரில் இருக்க வேண்டும். இப்பொழுது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆரிக்கு பாலா கால் செய்கிறார்.
இந்த தருணத்திற்காக தான் மக்கள் பலரும் காத்திருந்தது. பாலா தனது கேள்விகளை வரிசையாக அடுக்கிக்கொண்டே போகிறார். அதாவது ஆரியிடம் உங்களை வெளியில் வைத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.
நீங்கள் ஒருவரை அடித்து விளையாட வேண்டாம், ஒன்றாக இணைந்து விளையாடுவோம்னு சொல்றிங்க ஆனா நீங்க அப்படி தான் விளையாடுறிங்களா?? நான் கெட்டவன்னு சொல்றவன நம்பலாம், நான் நல்லவன்னு சொல்றவனையும் நம்பலாம், ஆனா நான் மட்டும் தான் நல்லவன்னு சொல்றவனை எப்படி நம்புறது என்று சரமாரியாக கேள்விகளை அடுக்குகிறார். ஆனால் ஆரியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அடுத்த ப்ரோமோவும் வெளியானது. அதில் ஆரி மற்றும் பாலா இவர்களில் யார் ஜெயித்தார் என்பது தெரியவில்லை. இருவரும் தனித்தனியாக பேசி கொள்கின்றனர். நான் நினைத்தது நடந்துடுச்சு, எனக்கு பதில் கிடைச்சிருச்சு என்றும் பேசிக்கொள்கின்றனர். இதற்கிடையில் நிஷா பாலாவிடம் நீ அதை கேப்பனு நெனச்சேன் ஆனா கேக்கல என்றும் கூறுகிறார். இந்நிலையில் 2 ப்ரோமோக்களும் புதிராகவே உள்ளதாக மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.