பாரதி கண்ணம்மாவில், ஹேமாவை தன்னிடம் கொடுக்க 4 நாள் அவகாசத்தை கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு கொடுத்துள்ளார். ஆனால் பாரதி ஹேமா இல்லையென்றால் நான் உயிரை விட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார். அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இத்தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பாரதி கண்ணம்மா:
இன்றைய எபிசோடில் கண்ணம்மா சித்தி பாக்கியாவிடம் விவாகரத்து பற்றி நான் சொன்னது என்ன ஆச்சு என பாரதி விசாரிக்கிறார். இது உடனே முடிக்கிற விஷயம் இல்ல கொஞ்சம் டைம் கொடுங்க என பாக்கியா கேக்கிறார்.
அதை தொடர்ந்து வெண்பா கண்ணம்மா வீட்டில் தன் இரண்டாம் குழந்தையை விசாரித்து அழுவது போல் நடிக்கிறார். வெண்பாவோ என் பாரதியை தட்டி பரிச்சதுனாலதான் நான் இப்படி உன் குழந்தையை பிச்சை எடுக்க வச்சேன் என சொல்ல வெண்பாவுக்கு தெரியாமல் அவர் பேசியதை கண்ணம்மா வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.
வெண்பா காலில் விழாத குறையாக கெஞ்ச நான் வீடியோவே எடுக்கல.. அவ்வளோ பயம் இருக்கவ ஏன் இப்படி நடத்துகிற.. என நக்கலாக கேக்கிறார். இதனால் வெண்பாவுக்கு இன்னும் கோவம் வருகிறது.
பின்னர் வீட்டில் பாரதி பெயரை ஹேமா பச்சை குத்தி கொள்வதாக சொல்ல, ஹேமா தன் மீது வைத்திருக்கும் பாசத்தால் பாரதி கண் கலங்குகிறார். அதை தொடர்ந்து நடு ராத்திரி கண்ணம்மாவுக்கு ஹேமாவை வெண்பா கடத்துவது போல் கெட்ட கனவு வர அந்நேரமே போன் போட்டு ஹேமாவை பற்றி சௌந்தர்யாவிடம் விசாரிக்கிறார்.
இவ்வாறு மாறி மாறி பாரதியும் கண்ணம்மாவும் ஹேமாவை நினைத்து கொண்டு உள்ளதை நினைத்து என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்புகிறார் சௌந்தர்யா. இதோடு இன்றைய எப்டிசோடு முடிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்