முன்னாள் காதலி ஹேமாவை(சந்தியா) சந்திக்கும் பாரதி?? மெகா சங்கமத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சியில் ராஜா ராணி சீரியலும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்துக்கொண்டுள்ளது. என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

விஜய் டிவி சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவும், பாரதியும் வெண்பாவின் சதியால் பிரிந்து வாழ்கின்றனர். இதற்கு முன் பாரதி தனது கல்லூரி காலத்தில் ஹேமா என்பவரை காதலித்தார். அதை பிடிக்காத வெண்பா தோழி என்று கூட பார்க்காமல் அவரை கொலை செய்தார். இந்நிலையில் தான் அவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று பொய் சொல்லி பாரதியை நம்ப வைத்தார் வெண்பா.

அடுத்ததாக கண்ணம்மாவை திருமணம் செய்து இந்த ஒரு சூழ்நிலையில் வந்து நிற்கிறது. தற்போது இந்த சீரியலில் ஹேமாவாக நடித்தவர் தான் ராஜா ராணி சந்தியா. அப்பொழுது இதில் சந்தியாவை பாரதி பார்க்க நேர்ந்தால் என்ன நடக்கும்?? ஏனெனில் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலும் மெகா சங்கமமாக ஒளிபரப்பானது. அதில் கோபியின் அப்பாவும், முல்லையின் அப்பாவும் ஒரே கதாபாத்திரம் தான்.

nharathi kannma

இதனை சுட்டிக்காட்டி இரண்டு வேடங்களில் நடித்தனர். இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் வெண்பாவிற்கு கண்ணம்மாவுடன் தான் சௌந்தர்யா அந்த சிறந்த மாமியார் மருமகள் போட்டி கலந்துக்கொண்டுள்ளார் என்று தெரிய அதனை பாரதியிடம் சொல்லி விடுகிறார். இதனால் பாரதி கோபமடைந்து அந்த இடத்திற்கு கூட செல்லலாம். அப்பொழுது எப்படியும் ஹேமாவை பார்க்கும் நிலை ஏற்படும். இதனை எந்த வித கோணத்தில் எடுத்து செல்ல போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here