பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா தற்போது வெளியிட்ட லைவில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும் ரோட்டில் தனக்கு நடந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மா தான் ஹேமா இத்தனை நாட்கள் சொல்லி கொண்டிருந்த சமையல் அம்மா என்ற உண்மை தெரிய வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பது பெரிய ட்விஸ்ட் தான். மக்கள் பலரும் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்ததற்கு காரணமே வெண்பாவின் வில்லத்தனமான விஷயம் தான்.
தற்போது லாக்டவுன் என்பதால் ஷூட்டிங் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் வெண்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி லைவில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தற்போது லைவில் பிரபல நிகழ்ச்சிக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் உங்களுக்கு ஷூட்டிங்கில் ஏற்பட்ட மோசமான சம்பவம் என்ன என்று கேட்க அதற்கு பதிலளித்திருந்தார். அதாவது இவர் கார் ஓட்டும் சீன் ஒன்று இருந்துள்ளது. இவருக்கு சரியாக கார் ஓட்ட தெரியாததால் வண்டியை எப்படியோ நிறுத்தி விட்டாராம்.
கீழே இறங்கிய அவருக்கு சேலை அவிழ்ந்து விட்டதாம். அங்கு கேரவேன் கூட இல்லையாம். அந்த சமயம் பார்த்து எந்த பெண்களும் அங்கு இல்லையாம். அப்படி இருக்க அங்கிருந்து 4 ஆண்கள் திரும்பி மறைத்து கொண்டு அவருக்கு புடவை கட்ட உதவினார்களாம். இதனை அந்த லைவில் கூறியுள்ளார் வெண்பா.