பாரதி கண்ணம்மா சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. பாரதி, கண்ணம்மாவை கண்டபடி பேசி விட அதனால் சௌந்தர்யாவிற்கும் பாரதிக்கும் பல சண்டைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் துர்கா மறுபடியும் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு துளசி பற்றிய உண்மைகள் தெரிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் சௌந்தர்யா, துளசி என அனைவரும் கண்ணம்மாவை வீட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கின்றனர். ஆனாலும் கண்ணம்மா கேட்பதாக இல்லை.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அந்த சமயத்தில் பாரதி வேறு வந்து கண்ணம்மாவை தகாத வார்த்தைகளால் பேசுகிறார். இதனால் பாரதி வேணு இடையே பெரிய சண்டையும் ஏற்படுகிறது. மேலும் வெண்பாவிடம் உண்மையை சொல்ல வந்த கோமதியை லாரியில் தள்ளி விடுகிறார். இன்றைய எபிசோடில் அஞ்சலியின் அம்மாவும் பாட்டியும் மார்க்கெட்டுக்கு சென்று வந்துகொண்டுள்ளனர்.
அப்பொழுது அஞ்சலி அவர்களை பாத்து அங்கிருந்து இறங்க கோவிலில் நடந்தவற்றை கூறுகிறார். அதற்கு அஞ்சலியின் அம்மா கண்ணம்மாவிற்கு ஆதரவாக பேசுகிறார். அதாவது கண்ணம்மா கண்டிப்பாக தப்பு செய்திருக்க மாட்டாள். அவள் ஒரு கற்புக்கரசி என்று கூறுகிறார்.
இதனால் அஞ்சலி கோபமடைந்து செல்கிறார். மேலும் வெண்பாவை காட்டுகின்றனர். வெண்பா கோமதி இறந்ததை அடுத்து துர்காவை தான் கொல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார். இதனால் போலீசுக்கு கால் செய்து துர்கா தமக்கு மிகவும் தொல்லை கொடுப்பதாக கூறுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது எதுவும் தெரியாமல் உள்ளே வரும் துர்கா வெண்பாவிற்கு தாலி கட்ட முயற்சிக்கிறார். அந்த நேரம் பார்த்து போலீஸ் உள்ளே வர மறுபடியும் போலீசிடம் சிக்கிக்கொள்கிறார் துர்கா. அடுத்ததாக நேற்று நடந்த விசயத்திற்கு பாரதி சௌந்தர்யாவிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார்.
ஆனால் அவர் கண்டுகொள்ளவே இல்லை. அப்பொழுது வேணு அங்கு வர அவரிடமும் பாரதி மன்னிப்பு கேட்கிறார். மேலும் சௌந்தர்யா சமாதானமும் ஆகிறார். அதன் பின் வெண்பாவிடம் சென்று நடந்தவற்றை கூற வெண்பா பாரதியை 2 நாட்கள் எங்காவது சென்று தங்கு என்று ஏத்தி விடுகிறார். மேலும் பாரதியை திருமணம் செய்துகொள்ளுமாறு அவரிடம் கூற பாரதி அதிர்ச்சியடைகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.