குழந்தையை தன் சாயலில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடையும் பாரதி – சூடு பிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் பல விறுவிறுப்பான காட்சிகளுக்கு ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிலையில் சௌந்தர்யா கண்ணம்மாவின் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்ததால் பெரிய பிரச்சனை எழுகிறது. இன்றைய எபிசோடில் பாரதி குழந்தை அழுவதை பார்த்து பாலை கொடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா

நேற்றைய எபிசோடில் சௌந்தர்யா பாரதியை வற்புறுத்தி குழந்தைக்கு வைத்தியம் பார்க்க வைக்கிறார். மேலும் கண்ணம்மா குழந்தைக்கு மருந்து வாங்க சென்ற இடத்தில் காசு இல்லாமல் போக வேலை தேடி அழைக்கிறார். ஆனால் கண்ணம்மாவிற்கு வேலை கிடைக்கவில்லை.

மேலும் இன்றைய எபிசோடில் பாரதி ஹாலில் வேலை பார்த்துக்கொண்டிருக்க சௌந்தர்யா போன் வருவதை போல நடித்து பாரதியிடம் குழந்தையை கொடுத்து விட்டு செல்கிறார். மேலும் குழந்தை பசியால் அழுது பாரதியை எட்டி உதைக்கிறது. பாரதிக்கு குழந்தை அழுவது  பார்த்து கண் கலங்குகிறது.

சௌந்தர்யா பாரதியிடம் பால் கொடுக்க சொல்ல பாரதியும் பாலை கொடுக்கிறார். பாரதிக்கு இந்த சௌந்தர்யாவின் திட்டம் தான் என்று தெரிந்து வழக்கம் போல கோவமடைகிறார். மேலும் அஞ்சலி நடந்தவற்றை அவளின் தாயிடம் சொல்ல அவர்களுக்கு எதோ தப்பாக உள்ளது என்று சந்தேகமடைகின்றனர்.

இந்நிலையில் குழந்தையை தூக்கிக்கொண்டு கண்ணம்மா பாரதியின் மருத்துவமனைக்கு செல்கிறார். பாரதி கன்னம்வை பார்த்து வெளியே போ என்று ஆத்திரமடைந்து கூற கண்ணம்மா சிரித்து கொண்டே குழந்தைக்கு உடம்பு சரியில்லை பீஸ் கட்டிட்டு தான் வந்திருக்கேன் என்று கூறுகிறார்.

மேலும் குழந்தைக்கு என்ன ஆச்சு என்று பாரதி கேக்க அப்பா காய்ச்சல் அதனால் தான் அப்பாவை பார்க்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல பாரதி கடுப்பாகிறார். மேலும் கண்ணம்மா பாரதியிடம் சொல்ல குழந்தைக்கு கண், மூக்கு மற்றும் வாய் எல்லாமே அவரின் அப்பாவின் சாயல் என்று கூறுகிறார். இதனால் பாரதியின் மனது குழப்பமடைகிறது. இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here