குழந்தையை கடத்த திட்டமிடும் வெண்பா – காப்பாற்ற போராடும் துர்கா!! அனல் பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவை தேடி வரும் துர்கா அவருக்கு தாலி கட்ட முயற்சிக்க வெண்பாவும் எப்படியோ தப்பித்து செல்கிறார். கோவிலுக்கு வரும் வெண்பாவிற்கு கண்ணம்மாவின் குழந்தையின் காது குத்தும் இங்கே தான் நடக்கவுள்ளது தெரிகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் நேற்றைய எபிசோடில் பல விறுவிறுப்பான கட்டங்கள் ஒளிபரப்பானது. கண்ணம்மாவும் குழந்தைக்கு பெயர் வைக்க கோவிலுக்கு செல்ல சௌந்தர்யாவும் அதே கோவிலிலேயே குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியை வைக்கிறார். மேலும் துர்கா வெண்பாவை தேடி வீட்டிற்கு வர வெண்பாவும் பதட்டமடைந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் துர்கா வெண்பாவை இறுக்கமாக பிடித்து தாலி கட்ட முயற்சிக்க எப்படியோ தப்பித்து கோவிலுக்கு வந்து சேர அங்கு ஒரு வண்டியில் கண்ணம்மா கட்அவுட் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். இன்றைய எபிசோடில் பாரதி, கண்ணம்மாவின் கட்அவுட் இருப்பதை கூட பார்க்காமல் காலில் பேசிக் கொண்டுள்ளார்.

அதன் பின் வெண்பா அங்கு வர பாரதியிடம் உண்மையை சொல்லி விடுவாரோ என்று பார்த்தால் அவர் வேறு திட்டத்தில் உள்ளார். மேலும் பாரதியை கண்ணம்மா பார்த்தால் DNA டெஸ்ட் எடுக்க அழைத்து விடுவாளோ என்று பயந்து பாரதியிடம் உண்மையை சொல்லாமல் மறைகிறார். இதனிடையில் துர்கா வெண்பாவிற்கு கால் செய்து கோவிலுக்கு வந்து உனக்கு தாலி கட்டப் போவதாக மிரட்டுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு வெண்பா கண்ணம்மா எங்கிருக்கிறார் என்று தேட சௌந்தர்யா அவளை பார்த்து விடுகிறார். இதனால் கோவமும் அடைகிறார். இவளை யார் இங்கே வர சொன்னது என்று அவளை திட்டுகிறார். பிறகு வேணு, வெண்பாவை கூப்பிட அங்கு வருகிறார்.

குழந்தையை பார்த்து விட்டு குழந்தை கண்ணம்மாவை போல கருப்பாக உள்ளது என்று கூற சௌந்தர்யா வெண்பாவை ஜாடைமாடையாக, சிலர் வெள்ளையா இருப்பாங்க ஆனா மனசு முழுக்க அழுக்கா இருக்கும் அதுக்கு இது பரவாயில்லை என்று கேவலமாக பேசுகிறார். மேலும் வெண்பாவை பார்த்த அகிலன் கோவமடைகிறார்.

அடுத்து தனியாக செல்லும் வெண்பா ஆசிரமத்தில் கண்ணம்மாவை எதிரியாக பார்த்த அந்த பெண்ணிடம் கண்ணம்மாவின் குழந்தையை இப்பொழுதே கடத்த வேண்டும் என்று கட்டளையிடுகிறார். இதனால் அந்த பெண்ணும் கோவிலுக்கு வருகிறார். மேலும் சௌந்தர்யா, வேணு கண்ணம்மாவின் குழந்தையை தூரத்தில் இருந்தே பார்த்து ரசிக்கின்றனர். அதன் பிறகு துர்கா எந்த கோவில் என்று தேடி அலைகிறார்.

எப்படியும் வெண்பா ஏதோ திட்டம் போட்டிருப்பாள் கண்ணம்மாவை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு கோவிலாக அலைந்து கொண்டுள்ளார். வெண்பாவின் அடியாளாக அந்த பெண்ணும் கோவிலில் கண்ணம்மாவையும் குழந்தையையும் பார்த்து விடுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here