நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி உள்ளது.
கொரோனா பரவல்:
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்ப காலத்தில் கிடுகிடுவென உயர்ந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது சற்று குறைய தொடங்கி உள்ளது. மேலும் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக பிற நாடுகளை போன்று 2வது அலை தொடங்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 45,882 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதுவரை 90,04,366 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில், ஒரே நாளில் 584 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,32,162 ஆக அதிகரித்து உள்ளது. ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரே நாளில் 44,807 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 84,28,410 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் விகிதம் 93.58% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.47% ஆக உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது மருத்துவமனைகளில் 4.95% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின் படி நாடு முழுவதும் இதுவரை 12,95,91,786 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.