பாரதியின் உயிரை காப்பாற்றும் குழந்தை – பல பாச போராட்டங்களுடன் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது? என மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் கதைக்களம் போயிக்கொண்டுள்ளது. இப்பொழுது அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

சௌந்தர்யா பாரதியையும், கண்ணம்மாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று ஒரு பக்கம் போராடிக் கொண்டுள்ளார். மறுபக்கம் பாரதியை அடைய வேண்டும் என்ற வெறியில் கண்ணம்மாவை கொல்ல துடித்து கொண்டிருக்கிறார் வெண்பா. இப்பொழுது வெண்பா பிடியில் சிக்காமல் கண்ணம்மா சௌந்தர்யாவின் ஏற்பட்டால் வேலைக்கும் சென்று வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் துளசி, கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருக்க இப்படியே கண்ணம்மாவின் வாழ்க்கை நல்ல படியாக போயிக்கொண்டுள்ளது. இப்பொழுது வெண்பா பற்றிய உண்மை பாரதிக்கு எப்பொழுது தெரிய வரும்?? எப்பொழுது கண்ணம்மா பற்றி தெரிந்து கொள்வார்?? பாரதியை கண்ணம்மா ஏற்றுக் கொள்வாரா?? இவ்வாறு பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் வெண்பா நாளுக்கு நாள் கண்ணம்மாவை பற்றி பாரதியிடம் ஏத்திவிட மேலும் பாரதி கண்ணம்மா மீது வெறுப்பை தான் கொட்டுகிறார். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. வழக்கம் போல ஹாலில் தனியாக பாரதி அமர்ந்திருக்கிறார். குழந்தை அழுகும் சத்தத்தை கேட்டு எரிச்சலும் அடைகிறார்.

அதன் பின் வேறு வழியில்லாமல் பாரதி குழந்தையை பார்க்க எழுந்திருக்க சரியாய் ஃபேன் அவர் அமர்ந்திருந்த இடத்தில் விழுகிறது. இதனால் பாரதியும் அதிர்ச்சியடைகிறார். குழந்தையிடம் வந்து தன் உயிரை கைப்பற்றியதை எண்ணி கண்கலங்குகிறார். மேலும் குழந்தைக்கு முத்தமிடுகிறார். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும்போது குழந்தையின் மீது பாரதிக்கு வரும் எபிசோடுகளில் பாசம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here