பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் பரீனா தற்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வெண்பா பாரதி தன்னை எப்படியாவது திருமணம் செய்து கொள்வான் என்று துடித்து கொண்டிருந்தார்.
ஆனால் வெண்பாவின் குணம் அறிந்து ஹேமாவுக்கு எதாவது பிரச்சனை வருமோ என்று எண்ணி திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை கைவிட்டார். மேலும் கண்ணம்மாவை ஏதேதோ பேசி வரவழைத்து தற்போது பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மை தெரிய வருகிறது.
இதனால் பாரதி கண்ணம்மா மீது கோவமடைகிறார். மேலும் ஹேமாவையும் கண்ணம்மாவுடன் சேர விட கூடாது என்றும் முடிவு செய்கிறார்.
இதுதான் வெண்பாவின் ஆசையும். இப்படி பரபரப்பாக ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் திடீரென நிறுத்தப்பட்டதால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் வெண்பா பல ரீல்ஸ் மற்றும் போட்டோஷூட் நடத்தி வருகின்றனர். அதெல்லாம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெண்பா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.