லக்ஷ்மியை வேறு வழியில்லாமல் பாரதி வீட்டிலேயே விட்டு செல்லும் கண்ணம்மா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்டிப்பாக லக்ஷ்மியின் அம்மா வந்தால் தான் அவளை விடுவேன் என்று சொல்லிவிட கண்ணம்மா வேறு வழியில்லாமல் வீட்டிற்கு செல்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மா மீது கடுமையான கோவத்தில் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது கண்ணம்மா வீட்டிற்கு வந்து லக்ஷ்மியை அழைத்து செல்ல வருகிறார். ஆனால் பாரதியோ ஊரில் இருந்து லக்ஷ்மியின் அம்மா வரட்டும் என்று சொல்கிறார்.

barathi kannamma

கண்ணம்மா பதிலுக்கு பதில் பேச ஆரம்பிக்கிறார். அதாவது தன்னை நம்பி தான் லக்ஷ்மியின் அம்மா விட்டு சென்றதாகவும் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது என்று கேட்கிறார். பாரதியும் அதனை தான் பார்த்து கொள்வதாக சொல்கிறார்.

barathi kannamma

மேலும் லக்ஷ்மியின் அம்மாவிற்கு மருந்து எழுதி கொடுத்தது நான் தான், லக்ஷ்மியை படிக்க வைப்பதும் நான் தான் அப்படி இருக்க அவங்க அம்மா எப்படி திட்டுவாங்க என்று சொல்கிறார். கண்ணம்மாவால் எதுவுமே பேச முடியவில்லை. லட்சுமி தூக்கத்தில் இருந்து முழித்து கீழே வர கண்ணம்மாவை தன் அம்மா தான் என்று சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

பாரதிக்கு அது மிகவும் கோவத்தை தூண்டுகிறது. கண்ணம்மாவுக்கும் சௌந்தர்யாவிற்கு லட்சுமி பற்றிய உண்மை பாரதிக்கு தெரிந்து விட்டதா?? என்ற சந்தேகம் வேறு எழுகிறது. ஆனாலும் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்நிலையில் தான் வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு செல்கிறார்.

வீட்டிற்கு சென்று லக்ஷ்மியை பிரிய முடியாமல் கதறி அழுகிறார். அந்த இடத்தில் லட்சுமி என் மகள் என்று சொன்னால் லக்ஷ்மியின் பிறப்பை பற்றி தவறாக பேசி விடுவாரோ என்று பயத்தில் எதுவும் சொல்ல முடியாமல் போனதாக நினைத்து கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here