முல்லையின் வற்புறுத்தலில் கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் முருகன் – கோவத்தில் கொந்தளிக்கும் பார்வதி!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா எங்கு போவது என்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளனர். மேலும் முல்லையும் தனமும் கண்ணனுக்கு உதவி செய்ய பல முயற்சிகளை செய்துகொண்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் வீட்டுக்கு வந்து விட்டு சென்றதில் இருந்து வீடே சோகமாகிறது. கண்ணன் கஷ்டப்படுவதை யாராலுமே பார்க்க முடியவும் இல்லை. தனம் மனசு தாங்காமல் தன் அண்ணன் ஜெகாவிற்கு கால் செய்து தயவு செய்து கண்ணனுக்கு உதவி செய்யுமாறு கெஞ்சுகிறார்.

ஆனால் ஜெகா தன்னால் முடியவே முடியாது, அவனுக்கு இதெல்லாம் வேணும் என்று கண்டபடி பேசுகிறார். அடுத்ததாக முல்லை தன் அப்பாவிற்கு கால் செய்து கெஞ்ச கடைசியில் ஒத்துக்கொள்கிறார்.

அங்கு கண்ணன் ஐஸ்வர்யா ரூம் எடுத்து தங்கலாம் என்று முடிவு செய்கின்றனர். அப்பொழுது முல்லையின் அப்பா அங்கு வர கண்ணனிடம் இப்படி செஞ்சுட்டியே என்று கூறுகிறார். அடுத்து எங்க போய் எப்படி பிழைக்க போற என்று கேட்கிறார்.

கண்ணன் எதுவும் சொல்லாமல் இருக்கா தன் வீட்டிற்கு வருமாறு அழைத்து செல்கிறார். கண்ணனை அழைத்து கொண்டு வீட்டிற்கு வர அப்பொழுது முல்லையின் அம்மா பார்வதி உள்ளே விட மறுக்கிறார். இவங்க ரெண்டு பேரும் கொழுப்பு எடுத்து போயி இருந்தா நான் என்ன பண்ணுவேன்.

என்னால உள்ள விட முடியாது என்று சொல்கிறார். மேலும் எனக்கு என்ன தலையெழுத்தா?? என்று சொல்கிறார். முல்லையின் அப்பா இது தன்னுடைய அக்கா மகன் என்று சொல்லி உள்ளே அழைத்து செல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here