கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். ஆனாலும் குறைந்தபட்ச வெப்பநிலை, கனமழை, புயல் என சூழ்நிலை மாற்றங்கள் மாறி வருவதால் மக்களுக்கு பல பாதிப்புகளுக்கு ஆட் கொள்ளப்படுகிறார்கள். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் திருவனந்தபுரதில் பெருமாங்குழி பகுதியில் உள்ள தனியார் பண்ணையில் கோழி, வாத்து அடுத்தடுத்து மடிந்து வருகிறது. இதனால் போபாலில் உள்ள பரிசோதனை கூடத்தில் ரத்த மாதிரியை சோதித்த போது பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த பண்ணையை சுற்றியுள்ள இரண்டாயிரம் பறவைகளை உடனடியாக அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டாக்டர் ஷர்மிகாவுக்கா இந்த நிலைமை?? பொய்யான தகவலை பரப்புவதாக புகார்.., ஆஜராக உத்தரவு!!
மேலும் பெருமாங்குழி பகுதியை சுற்றி 9 கி.மீ. சுற்றளவில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிப்பகுதியில் இருந்து பெருமாங்குழிக்கும், பெருமாங்குழியில் இருந்து வெளிப்பகுதிக்கும் இறைச்சி, முட்டை ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.