பிரபல இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் “நாங்கள் அனைவரும் எந்த அறிகுறிகளும் இல்லாமல் நன்றாக உணர்கிறோம், ஆனால் அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா தொற்று:
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் டாக்டர்கள் பரிந்துரைத்தபடி, அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து உள்ளார் . “எனது குடும்ப உறுப்பினர்களும் நானும் சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சலை உணர்ந்தோம். அது தானாகவே குறைந்தது, ஆனாலும் நாங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். இதன் விளைவாக இன்று COVID-19 உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி நாங்கள் வீட்டை தனிமைப்படுத்தியுள்ளோம்” என்று எஸ்.எஸ் ராஜமௌலி ட்வீட் செய்துள்ளார். மேலும் அதிலிருந்து குணமடைந்து பிளாஸ்மா தானம் செய்ய காத்திருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – ‘அன்லாக் 3.0’ தளர்வு விதிமுறைகள் இதோ!!
பாக்ஸ் ஆபிஸில் முழுமையான பிளாக்பஸ்டர்களாக வெளிவந்த பாகுபலி படங்களை இயக்குயதில் எஸ்.எஸ் ராஜமௌலி மிகவும் பிரபலமானவர். இப்படங்களில் பிரபாஸ், ராணா தகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், சத்தியராஜ், நாசர் மற்றும் சுப்பராஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
அவரது அடுத்த படம் ஆர்.ஆர்.ஆரும் ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படம். ஆர்.ஆர்.ஆர் முக்கிய வேடங்களில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இதில் ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் மற்றும் சர்வதேச நடிகர்களான ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் மற்றும் அலிசன் டூடி ஆகியோரும் இடம்பெறுவார்கள். ஆர்.ஆர்.ஆர் 1920 ஆண்டு கதைக்களங்களில் அமைக்கப்பட்டுள்ளது, இது பிரிட்டிஷ் ராஜ் மற்றும் ஹைதராபாத்தின் நிஜாமிற்கு எதிராக முறையே போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராமராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரை அடிப்படையாகக் கொண்ட கதை.