மணப்பெண் கோலத்தில் சீத்தல்., எங்க, தலைவன் பப்லு பிருதிவியை காணோம்! ஒண்ணுமே புரியலையே?

0
மணப்பெண் கோலத்தில் சீத்தல்., எங்க, தலைவன் பப்லு பிருதிவியை காணோம்! ஒண்ணுமே புரியலையே?

சீரியல் நடிகர் பப்லு பிருத்திவியை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ள சீத்தல், மணப்பெண் கோலத்தில் இருக்கும் ரீசன்ட் போட்டோ வெளியாகியுள்ளது.

வெளியான போட்டோ:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் அப்பா கேரக்டரில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் பப்லு ப்ரித்வி. வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள இவர், இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர், சமீபத்தில் 2ம் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார். 54 வயதை நெருங்கும் பப்லு, 24 வயது இளம் பெண்ணை 2ம் திருமணம் செய்ய உள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறிய நிலையில், இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஜாலியாக சுற்றி வருகின்றனர். இந்த நிலையில், சீத்தல் மணப்பெண் போல மேக்கப் போட்டு சோசியல் மீடியாவில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த பலரும், பொண்ணு நீங்க ரெடி ஆகிட்டீங்க? நம்ம மாப்பிள்ளை பப்லு பிரித்திவி எங்க? என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், ஏதாவது விளம்பரத்திற்காக சீத்தல் இவ்வாறு மேக்கப் போட்டிருக்கலாம் என ஒரு சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த போட்டோவுக்கான எந்த விளக்கத்தையும் சீத்தல் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here