பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு வழியாக ஜெனி செழியன் இருவருக்கும் இடையில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் பாக்கியா எழில் இருவரும் சந்தோஷமாக இவர்களை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். மேலும் ஜெனி செழியன் வருவதை பார்த்து கோபி. ஈஸ்வரி இருவரும் அதிர்ச்சியாகின்றனர். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ஜெனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது.இத்தனை நாள் அவ நம்ம பேச்சைக் கேட்காமல் டைவர்ஸ் முடிவு எடுக்கிற அளவுக்கு போயிருக்கா என சண்டை போடுவாராம். உடனே பாக்கியா ஜெனி இனிமேல் இந்த வீட்டில் தான் இருப்பாள். உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்களும் உங்க மகனும் வெளியே போங்க என சொல்லி விடுவாராம். பாக்கியா சொன்ன வார்த்தையை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சியாவராம்.