எனக்கு செழியன் தான் முக்கியம்.., அப்பா-அம்மாவை தூக்கி எறிந்த ஜெனி.., பாக்கியலட்சுமி அப்டேட்!!!

0
எனக்கு செழியன் தான் முக்கியம்.., அப்பா-அம்மாவை தூக்கி எறிந்த ஜெனி.., பாக்கியலட்சுமி அப்டேட்!!!
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா எப்படியாவது கணேஷ் பற்றிய உண்மையை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விடலாம் என நினைக்கிறார். ஆனால் அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஜெனியின் அப்பா செழியனுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார். இதை பார்த்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். பின் ஈஸ்வரி, கோபி, பாக்கியா அனைவரும் ஜெனி வீட்டிற்கு சென்று அவரது அப்பா அம்மாவை சமாதானப் படுத்துகின்றனர். ஆனா ஜெனி அப்பா இனி என் பொண்ணு உங்க கூட வரமாட்டா. இனி உங்க பையன் என் பொண்ணு வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்று சொல்கிறார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஜெனி அவரது அப்பா அம்மாவிடம் யாரு கேட்டு செழியனுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புனீங்க. நான் எப்ப நாளும் செழியன் கூட தான் வாழ்வேன். என்னோட குடும்பம் அதுதான். நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். என்னால டைவர்ஸ் கொடுக்க முடியாது என்று சொல்லி விடுவாராம். இதற்கு ஜெனியின் அப்பா எங்க பேச்சை கேட்கவில்லை என்றால் நீ இந்த வீட்டிலேயே இருக்கக் கூடாது என்று சொல்வாராம். உடனே ஜெனி எனக்கு நீங்க தேவையில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here